உளூச் செய்வது

(நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து (எதையேனும்) சாப்பிட்டிருக்குமானால் அதை நீர் சாப்பிடாதே! ஏனெனில், அது தனக்காகவே அதைப் பிடித்திருக்கிறது' என்று கூறியபோது, 'என்னுடைய நாயை அனுப்புகிறேன்; ஆனால் (வேட்டையில்) அதோடு வேறொரு நாயையும் காண்கிறேன்?' என்று கேட்டேன். 'அப்படியானால் அதை நீர் சாப்பிடாதே! (ஏனெனில், நீர் உம்முடைய நாயைத்தான் இறைவனின் பெயர் சொல்லி அனுப்பினீரே தவிர வேறு நாய்க்கு நீர் இறைவனின் பெயர் சொல்லவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அதீய் இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.