நபிமொழி 32

'நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.

'அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்." என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸ{ப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)