நபிமொழி 48

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ''நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள்.

அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ''உன்னை அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். 'அல்லாஹு அக்பர்' என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர்.

என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.''உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர்.

என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள்.

எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ''நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?" என்று அல்லாஹ் கேட்பான்.''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை" என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ''நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ''மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு)வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு)" என்று கூறுவார்.

''அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.    (நூல்: புகாரி)