தொழுகை

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ("அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.