தொழுகை

இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். 'உம்முடைய வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென விரும்புகிறீர்" என்று என்னிடம் கேட்டனர். நான் ஓர் இடத்தைக் காட்டியதும் நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி(த் தொழலா)னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) தொழுதார்கள்.