தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'நஜ்து' பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து 'ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்!" என்றனர். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த குட்டைக்குச் சென்று குளித்தார். பின்னர் பள்ளிவாசலுக்கு வந்து 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று கூறினார்.