தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது 'இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். 'இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால்ய ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள்.